திருவள்ளூர்

14 செல்லிடப்பேசிகள் பறிமுதல்; இருவர் கைது

DIN


புழல் பகுதியில் செல்லிடப்பேசி திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 14 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கதிர்வேடு சிக்னல் அருகே புழல் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரைப் பிடித்து ஆய்வாளர் நடராஜ் விசாரணை நடத்தினார். 
அதில், இவர்கள் ஊத்துக்கோட்டையை அடுத்த லட்சிவாக்கம் பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த சின்னராசு (20), பெரியபாளையம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பிரகாஷ்(19) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் செங்குன்றம், புழல், மாதவரம், பால் பண்ணை மற்றும் கொளத்தூர் ஆகிய பகுதிகளில் செல்லிடப்பேசி பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 
இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 14 செல்லிடப்பேசிகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT