திருவள்ளூர்

விநாயகர் திருவீதியுலா

DIN

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருவள்ளூரில் கோலம் கொண்ட அம்மன் கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப்புப் பூஜை மற்றும் திருவீதியுலா வரும் நிகழ்வு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. 
திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோலம்கொண்ட அம்மன் கோயிலில் வீற்றிருக்கும் விநாயகருக்கு 8-ஆவது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, இரவில் மேளதாளம் மற்றும் வாண வேடிக்கையுடன் விநாயகர் சிலை முக்கிய தெருக்களில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கொழுக்கட்டை, சுண்டல், புளியோதரை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோலம் கொண்ட அம்மன் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT