திருவள்ளூர்

தமிழக அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

DIN

தமிழக அரசு ஊழலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுகவினர்  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   
 திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பெரியகுப்பம் ரயில்வே நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். 
ஆர்ப்பாட்டத்தின்போது, குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர், காவல் துறை அதிகாரி ஆகியோரை பதவி நீக்கம் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
  இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாநில சட்டப்பிரிவு மாநில இணைச்செயலாளர் இ.பரந்தாமன், நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேஷன், கே.திராவிட பக்தன் உள்பட அக்கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
பொன்னேரியில்...
பொன்னேரி, செப். 18: திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், பொன்னேரி பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை வகித்தார். திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு, கண்டன உரை ஆற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், மாவட்ட , ஒன்றிய, நகர  நிர்வாகிகள், பொன்னேரி நகரச் செயலர் விஸ்வநாதன், மீஞ்சூர் நகரச் செயலர் மோகன்ராஜ், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT