பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழாவையொட்டி, திருவள்ளூர் பெரியகுப்பத்தில் உள்ள நரிக்குறவர்கள் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் திங்கள்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில்வே பாலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவர் ரகுராமன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் த.பாலாஜி கலந்து கொண்டு, 80 நரிக்குறவர் குடும்பத்தினருக்கு அரிசிப் பொட்டலம் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார். இதில், நிர்வாகிகள் சதீஷ், பூர்ணேஷ், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.