திருவள்ளூர்

பனையஞ்சேரி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சி சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவள்ளுர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட பனையஞ்சேரி, சிஞ்சேரி, எஸ்.வி.சத்திரம் கிராமங்களில் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சென்னை போன்ற பிற ஊர்களுக்கு பணிநிமித்தமாக செல்ல பெரியபாளையம்-புதுவாயல் இடையிலான பனஞ்சேரி சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். 
பொன்னேரி, ஆவடி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும், ஆரணி செல்பவர்களும் இந்த சாலையையே பிரதானமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது.  மழைக்காலம் வருவதால் இந்தசாலை இன்னும் மோசமடையும். 
புதன்கிழமை பெய்த சிறிய மழைக்கே இந்த சாலையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.  இந்த சாலையை சீரமைக்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விரைவில் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT