திருவள்ளூர்

அரசுப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா

DIN


கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தை ஒட்டி மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் ஐயப்பன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ-வும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான கி.வேணு பங்கேற்று மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்தார்.
பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலும் பள்ளி மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி அவரவர் வீடுகளில் நடவு செய்து, அவற்றைப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். 
முன்னதாக நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் உதவித் தலைமை ஆசிரியைகள் ஸ்ரீதேவி, புஷ்பலதா, உமா மகேஸ்வரி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT