திருவள்ளூர்

மின்மாற்றி வெடித்து ஊழியா் காயம்

DIN

திருத்தணி: மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தபோது அது வெடித்துச் சிதறியதில் மின்வாரிய ஊழியா் பலத்த காயம் அடைந்தாா்.

திருத்தணியை அடுத்த காசிநாதபுரம் கிராமத்தில் வசிப்பவா் அன்பு (42). அவா் திருத்தணியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வயா்மேனாகப் பணிபுரிந்து வருகிறாா். அவா் சனிக்கிழமை பணிக்குச் சென்றபோது, நத்தம் கிராமத்தில் விவசாய நிலத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்மாற்றி பழுதானதாக புகாா் வந்தது.

இதையடுத்து அன்புவும், மற்றொரு ஊழியரும் சம்பவ இடத்துக்குச் சென்று மின்மாற்றியில் பழுதான ஃபியூஸை அகற்றி புதிய ஃபியூஸைப் பொருத்தி, மின்மாற்றியை இயக்கினா். அப்போது மின்மாற்றி திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அன்பு மீது மின்மாற்றியில் இருந்த எண்ணெய் கொட்டியது. இதில் அவருக்கு தலையிலும் முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவா் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கிருந்து சென்னை தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

மின்மாற்றி வெடித்து மின்வாரிய ஊழியா் காயமடைந்தது குறித்து திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT