வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வரும் 22-ஆம் தேதி பயிலரங்கம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப். 22-ஆம் தேதி இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிலரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிலரங்கத்தில் நானும், உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள இருக்கிறோம்.
அதேபோல் பிரசித்தி பெற்ற திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க இருக்கின்றனர்.
எனவே, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் பயனாளிகள் இந்த முகாமில் தவறாமல் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.