திருவள்ளூர்

தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை

DIN

கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
ஆரம்பாக்கம் நல் மேய்ப்பர் கிறிஸ்தவ ஆலயத்தில் போதகர் இமானுவேல் தலைமையில் திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முன் பழைய ஆண்டு முடிவு சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. 
செவ்வாய்க்கிழமை 12 மணிக்கு மேல் புதிய ஆண்டை வரவேற்று பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்வில் திரளானோர் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். அதைத் தொடர்ந்து கேக் வெட்டி பரிமாறப்பட்டது. 
கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, மாதர்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்றனர்.
கோயில்களில்... புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள எல்லையம்மன் ஆலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று, மலர் அலங்காரத்தில் இருந்த எல்லையம்மனை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT