எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, புழல் மத்திய சிறையில் இருந்து 4 கைதிகள் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பூர்த்தி செய்த கைதிகள் நன்னடத்தையின் அடிப்படையில் தமிழக அரசு உத்தரவின்பேரில், படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த மொய்தீன் (49), திருவள்ளூரைச் சேர்ந்த சம்பத் (38), சிவகங்கையைச் சேர்ந்த ஜெய்பிரபு (32), சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த நாகராஜ் (41) ஆகியோர் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.