திருவள்ளூர்

காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க செல்லிடப்பேசி எண் அறிவிப்பு

DIN

பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க செல்லிடப்பேசி எண்ணை காவல் உதவி கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். 
பொன்னேரி நகரில் பெண்களை கேலி செய்வோர், வழிப்பறி செய்வோர், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வோர் மீது பொன்னேரி காவல் நிலையத்தில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் புகார் தெரிவிப்பர். இது போன்று பொதுமக்கள் புகார் தெரிவித்தும்,  சில நேரங்களில் அதன் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
 இந்நிலையில் பொதுமக்கள் அவசர உதவிக்கு பொன்னேரி காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள 90259 56256 என்ற செல்லிடப்பேசி எண்ணை காவல் உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை துண்டுப் பிரசுரங்களாக பொதுமக்களிடம் வழங்கி வருகிறார்.     
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT