திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் பாஜக எம்.பி. வழிபாடு

DIN

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாஜகவின் தேசிய இளைஞர் அணிச் செயலரும், எம்.பி.யுமான அனுராக் தாகூர் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
அவர் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியது: தமிழகத்துக்கு தற்போது ஆளுநரைச் சந்திப்பதற்காக நான் வந்துள்ளேன். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன். 
வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையில் அகில இந்திய அளவில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஏழை மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள், சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள், மத்திய அரசின் கீழ் அனைத்து ஏழைகளுக்கும் வீடு, மானியத்தில் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பல திட்டங்கள் மோடி ஆட்சியில் செய்து தரப்பட்டுள்ளன. மேலும், உலக அளவில் அனைத்து நாடுகளுக்கும் இந்தியாவின் வல்லமையை எடுத்துரைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. ஆகையால் அடுத்த பிரதமராக மீண்டும் மோடியே வருவார் என்றார் அவர். அப்போது பாஜக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT