திருவள்ளூர்

இரு சக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

DIN


திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசனின் மகள் கீர்த்திகா. இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். வியாழக்கிழமை கீர்த்திகா தனது தந்தை சீனிவாசனுடன் பைக்கில் திருவள்ளூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது புல்லரம்பாக்கம் கிருஷ்ணா கால்வாய் அருகே எதிரே வந்த மற்றொரு பைக் மோதியது. இதில் கீர்த்திகா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சீனிவாசன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT