திருவள்ளூர்

குடிநீர் தட்டுப்பாடு: வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு

DIN


அம்மையார்குப்பம் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
கோடைக் காலம் தொடங்கியதில் இருந்தே ஆர்.கே.பேட்டையை அடுத்த அம்மையார்குப்பத்தில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் குடிநீருக்கு கடும் அவதிப்படுகின்றனர். அவர்கள் சீரான முறையில் குடிநீர் வழங்கக் கோரி கடந்த சில தினங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குலசேகரன், அம்மையார்குப்பத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் தெரு, பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை  செவ்வாய்க்கிழமை சந்தித்து குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து கேட்டறிந்தார். மேலும் தடையின்றி குடிநீர் வழங்கவும், நீர்மட்டம் இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குழாய்கள் மூலம் சீரான முறையில் குடிநீர் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT