அதிமுக-வின் மாநில மீனவரணி துணைச் செயலராக கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம், நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெ.சுரேஷ்(40) நியமிக்கப்பட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக-வில் மாநிலப் பொறுப்பிற்கு வருவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
மாநில மீனவர் அணி துணைச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுரேஷுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், பொன்னேரி எம்எல்ஏ-வும் மாவட்டச் செயலருமான பலராமன், எம்.பி. டாக்டர் வேணுகோபால், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலர் கோபால் நாயுடு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.