திருவள்ளூர்

மகளிர் தின விழா: நல உதவிகள் வழங்கல்

DIN

மாதவரம் அருகே மகளிர் தின விழாவை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை மாதவரத்தை அடுத்த புழல் பகுதியில் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு சங்கத்தின் 11-ஆம் ஆண்டு விழாவும், மகளிர் தின விழாவும் சங்க வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏ.வி.ராஜன் தலைமை வகித்தார். விழாவில் மகளிரைப் போற்றும் வகையில் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். மேலும், ஏழை, எளிய பெண்களுக்கும், மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் இஸ்திரிப் பெட்டிகள், தையல் இயந்திரம் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. ஏழை, எளிய மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன. விழாவில் ஆட்டோ பாலாஜி, ஜெயினுலாவுதீன், நாகராஜ், சோபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT