திருவள்ளூர்

வணிக வளாகக் கட்டடத்தில் அரசுப் பேருந்து மோதி விபத்து

DIN

பொன்னேரியில் சாலையோரக் கட்டடத்தின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் சாலையில் விழுப்புரம் கோட்டப் பணிமனைக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையத்தைக் கடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோர வணிக வளாகக் கட்டடத்தின் மீது பேருந்து மோதியது. அப்போது, பேருந்தின் சக்கரங்கள் கால்வாயில் சிக்கின. இதனால் உடனடியாக பேருந்தை அங்கிருந்து எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக தாயுமான் செட்டி தெரு, பொன்னேரி- செங்குன்றம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 தகவலறிந்து வந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேருந்தை எடுத்துச் சென்றபின், போக்குவரத்து சீரானது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT