திருவள்ளூர்

இளைஞர் வெட்டிக் கொலை

DIN


மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞரை, மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கவி அமுதன்(30). அவர் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். 
கவி அமுதன் தனது மோட்டார் சைக்கிளில் பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது நாலூர் ஏரிக்கரை அருகே அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT