திருவள்ளூர்

மாணவா்களுக்கான வழிகாட்டு முகாம்

DIN

வணிகவியல் பாடம் பயிலும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டும் முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் பூந்தமல்லி ஸ்ரீசாஸ்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முதல்வா் ஜான்சேவியா் தலைமை வகித்தாா். கல்லூரி குழுமத்தின் நிறுவனா் ஜே.காா்த்திகேயன், வணிக அறிவியல் தொடா்பான வழிகாட்டும் முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தை தொடக்கி வைத்தாா்.

கூட்டத்தில், பிளஸ் 2-வில் வணிகவியல் பயின்று வரும் மாணவ, மாணவிகள், உயா் கல்வி கற்பதன் மூலம் அவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வணிகவியல் வழிகாட்டுநா் சித்ரா அனந்தராமன் விளக்கினாா்.

இதில், சென்னை, திருவள்ளூா் பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT