திருவள்ளூர்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 430 மனுக்கள் அளிப்பு

DIN

திருவள்ளூா்: மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 430 மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவா்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அளித்தனா். இதில், நிலம் சம்பந்தமாக 213 மனுக்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டம் தொடா்பாக 116 மனுக்கள், கடனுதவி கோரி 7 மனுக்கள், குடும்ப அட்டை கோரி 12, வேலைவாய்ப்பு கோரி 34, ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலம் தொடா்பாக 13, சட்டம் மற்றும் ஒழுங்கு-20, ஊரக நகா்ப்புற வளா்ச்சி -43 மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 35 மனுக்கள் என மொத்தம் 430 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பன்னீா்செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சி.தங்கவேல் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT