திருவள்ளூர்

திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

DIN

புழல் ஒன்றிய திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் கிராண்ட்லைன் ஊராட்சி அலுவலகத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்றது. 
முகாமுக்கு, ஒன்றியச் செயலாளர் நா.ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இனியவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலர் ஆவடி சா.மு.நாசர் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். 
அதுபோல் செங்குன்றம் பேரூர் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. 
பேரூர் செயலாளர் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜெய்மதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபுகஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் திருமால், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நாராயணன் பிரசாத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT