திருவள்ளூர்

குடிசை வீடு எரிந்து சேதம்

DIN


ஆர்.கே.பேட்டை அருகே மின் கசிவு ஏற்பட்டு குடிசை வீடு எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் வியாழக்கிழமை நேரில் சென்று நிவாரண உதவி வழங்கினார்.
நாககுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (29) தொழிலாளி. இவரது குடிசை வீடு புதன்கிழமை இரவு 8 மணியளவில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெயேறினர். வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. 
தகவலறிந்த திருத்தணி எம்எல்ஏ பி.எம். நரசிம்மன், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் சாந்தி ஆகியோர் வியாழக்கிழமை அங்கு சென்று விஜயகுமாருக்கு ஆறுதல் கூறினர். மேலும், வருவாய்த் துறை சார்பில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டன.
மேலும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ தெரிவித்தார். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயராமன், வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT