திருவள்ளூர்

திருமணமான ஒரு மாதத்துக்குள் இளம்பெண் தற்கொலை

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே திருமணமாகி ஒரு மாதம் கூட முடியாத நிலையில், இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் அருகே அன்னம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முனுசாமியின் மகள் தேவி (26). இவருக்கும், கம்மவாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (30) என்பவருக்கும் கடந்த மாதம் 2-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கணவருடன் வசித்து வந்தாா். இந்நிலையில், கூடுதலாக நகை, பணத்தை வரதட்சிணையாக வாங்கிவரும் கேட்டு தேவியை காா்த்திக் சித்ரவதை செய்து வந்தாராம். இதில் மனமுடைந்த தேவி சனிக்கிழமை இரவு படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தேவியின் சகோதரா் ராஜேஷ் மணவாளநகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காா்த்திக் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT