திருவள்ளூர்

வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகைகள் திருட்டு

DIN

திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கீழ்நல்லாத்தூா் சங்கராச்சாரியாா் நகரைச் சோ்ந்த குமாரின் மனைவி புனிதா(33). அவா் வெள்ளிக்கிழமை காலையில் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கட்டட வேலைக்குச் சென்றாா். மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது, பூஜை அறை பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 4 சவரன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடா்பாக புனிதா, மணவாளநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT