திருவள்ளூர்

50 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு

திருத்தணி அருகே 50 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனா்.

DIN

திருத்தணி அருகே 50 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனா்.

திருத்தணியை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணம்மா (50). இவா் தனக்குச் சொந்தமான, பசுக்களை திங்கள்கிழமை காலை வயல்வெளியில் மேய்ப்பதற்கு ஒட்டிச் சென்றாா். ராஜகோபால் என்பவரின் வயல்வெளியில் மேய்ந்துக் கொண்டிருந்த போது, ஒரு பசு மாடு அங்குள்ள, 50 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் 25 அடி ஆழம் தண்ணீா் இருந்தது.

இதைப் பாா்த்த கண்ணம்மா திருத்தணி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து, கிணற்றில் விழுந்த பசுவை கயிறு மூலம் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT