விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் மயில்களை வனத்துறையினா் மீட்டு காட்டில் விட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வயல்வெளி பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு மயில்கள் சுற்றித்திரிந்து இரை தேடி வந்தன. இந்த மயில்கள் திருத்தணி மலைப்பகுதி அல்லது காட்டுப் பகுதியில் இருந்து இரை தேடி இந்த கிராமத்துக்கு வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.
இதனிடையே, சில சமூக விரோதிகள் சுற்றித் திரியும் மயில்களை வேட்டையாடி சாப்பிட முயல்வதாக காசிநாதபுரம் கிராம மக்கள் தெரிவித்தனா். எனவே, வனத்துறையினா் உடனடியாக இந்த இரு மயில்களையும் மீட்டு, பத்திரமாக வனப்பகுதியில் விட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை எழுப்பினா்.