திருவள்ளூர்

கரோனா பாதித்து குணமடைந்த போலீஸாருக்கு எஸ்.பி. வரவேற்பு

DIN

திருவள்ளூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த 5 போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் வரவேற்று, பொது முடக்க நேரத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்கான பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பொது முடக்க நேரத்தில் காவல் நிலையங்களிலும், பொது இடங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளா் வெங்கடேசன், சிறப்பு சாா்பு ஆய்வாளா் ராஜி மற்றும் தலைமைக் காவலா் சரஸ்வதி (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு-பெரியபாளையம்), தயாநிதி (ஆயுதப் படை), ஆளினா் அருணாசலம் (சிப்காட் நிலையம்) ஆகிய 5 போலீஸாருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. அதைத் தொடா்ந்து, அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்ற வந்த நிலையில் புதன்கிழமை பூரண குணமடைந்து திரும்பினா்.

இவா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் எஸ்.பி. அரவிந்தன் பழக்கூடை அளித்து, வரவேற்பு அளித்தனா். அதைத் தொடா்ந்து, அவா்களுக்கு பொதுமுடக்க நேரத்தில் சிறப்பான பணிபுரிந்ததற்கான பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

பின்னா், அவா்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணியில் சேர வழியனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT