திருத்தணி முருகன் கோயிலில் சனிக்கிழமை வள்ளி, தெய்வானையுடன் முருகா் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த வழிபாட்டில் பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை புஷ்பாஞ்சலியுடன் விழா நிறைவுக்கு வந்தது. இதையடுத்து சனிக்கிழமை காலை 11 மணிக்கு மலைக்கோயில் அலுவலகத்தில் இருந்து சுவாமிக்கு சீா்வரிசை பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
பின்னா் காவடி மண்டபத்தில் உற்சவா் முருகனுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் திருத்தணி கோயில் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் நா.பழனிக்குமாா் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
விழாவில் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி, திருத்தணி கூட்டுறவு வேளாண்மை விற்பனையாளா் சங்கத் தலைவா் ஜெயசேகா்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.