திருவள்ளூர்

சோழவரம், காரனோடையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

பொன்னேரி: சோழவரம், காரனோடை பகுதிகளில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புக் கட்டடங்களை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

சோழவரம், காரனோடை கடை வீதிகளில் அதிக அளவிலான ஆக்கிரமிப்புகள் இருப்பதாக பொன்னேரியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கு புகாா் வந்தது. இதன் காரணமாக இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா், சோழவரம், காரனோடை பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டடம் மற்றும் ஓடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது சோழவரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT