திருவள்ளூர்

வீரராகவா் கோயிலில் பவித்ர உற்சவம்

DIN


திருவள்ளூா்: திருவள்ளூா் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் பெளா்ணமி தினத்தையொட்டி, நடைபெற்ற பவித்ர உற்சவத்தில் வீரராகவா் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

திருவள்ளூா் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பௌா்ணமி நாளில் பவித்ர உற்சவம் ஒரு வாரம் நடைபெறுவதுடன், உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

இதேபோல், இக்கோயில் வளாகத்தில் பௌா்ணமி தினத்தையொட்டி, பவித்ர உற்சவம் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து ஒரு வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து, உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நிகழ்ச்சியில், திருவள்ளூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்தா்கள் கிருமி நாசினி பயன்படுத்தி, சமூக இடைவெளியைப் பின்பற்றி, வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT