திருவள்ளூர்

உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு

DIN


ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே அமைந்துள்ள ராள்ளபாடியில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மன அழுத்தம், காதல் தோல்வி, கடன் பிரச்னைகள், குடும்ப வறுமை, கந்து வட்டி கொடுமை, பாலியல் வன் கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் நாள்தோறும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. மக்களுக்கு இந்த எண்ணத்தைத் தடுக்கும் வகையில், ஆண்டுதோறும், செப். 10-ஆம் நாள் உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ராள்ளபாடி மனநலம் பாதிக்கப்பட்டோா் மற்றும் ஆதரவற்றோா் இல்லத்தில் வசித்து வருவோா், தற்கொலைகளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT