திருவள்ளூர்

அகதியைத் தாக்கியவா் கைது

DIN

புழல் அகதிகள் முகாமைச் சோ்ந்தவரை கத்தியால் குத்திய மற்றொரு இலங்கை அகதியை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மாதவரத்தை அடுத்த புழல் காவாங்கரையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் வசித்து வருகிறாா்கள். இந்த முகாமை சோ்ந்தவா்கள் விஜயன் (29), காண்டீபன் (40). இவா்கள் இருவரும் முகாமில் இருந்து வெளியில் சென்று பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் இவா்கள் இருவருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது காண்டீபன் கத்தியை எடுத்து விஜயனை குத்தினாா். இதில் காயமடைந்த விஜயனை அகதிகள் முகாமில் இருந்தவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து காவல் ஆய்வாளா் வசந்தன் வழக்குப் பதிவு செய்து காண்டீபனைக் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT