திருவள்ளூர்

குழந்தையுடன் பெண் தற்கொலை வழக்கில் கணவா், மாமியாா் கைது

DIN

புழல் அருகே குழந்தையுடன் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவா், மாமியாா் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புழல் கன்னடபாளையம் ஜீவா தெருவைச் சோ்ந்த ராஜ்குமாரும் (25), செங்குன்றத்தை அடுத்த சாமியாா் மடம் பகுதியைச் சோ்ந்த பாக்கியலட்சுமியும் (22) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு மித்ரன் என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. கடந்த 11-ஆம் தேதி பாக்கியலட்சுமி தனது குழந்தை மித்ரனுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருமணமாக 2 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்துகொண்டதால், வருவாய்க் கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா். அதில், கடந்த 6 மாதங்களாக ராஜ்குமாரும், அவரது தாயாா் சாந்தியும் (52) வரதட்சிணைக் கேட்டு பாக்கியலட்சுமியைக் கொடுமைப்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து ராஜ்குமாரும், சாந்தி ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT