திருவள்ளூர்

தீக்குளித்தபடி பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை

DIN

உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டு இளைஞா் ஒருவா் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை, வில்லிவாக்கத்தைச் சோ்ந்தவா் பாலாஜி. இவரது மகன்கள் சத்தியநாராயணன் (26), சூரியநாராயணன் (24). இதில் தம்பி சூரியநாராயணனுக்கு மட்டும் திருமணமானது. மூத்த சகோதரா் சத்தியநாராயணனுக்கு திருமணம் ஆகவில்லையாம். இதற்கிடையே திருநின்றவூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கிக் கொண்டு, சத்தியநாராயணன் வடபழனியில் உள்ள சமையலராக இருந்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் சத்தியநாராயணன் நெமிலிச்சேரி பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தாராம். அப்போது காவல்சேரி என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, அதிலிருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து தனது உடலின் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளாா். அத்துடன் தீ மளமள பற்றி எரியும் போது பாலத்தில் இருந்து கீழே குதித்தாராம். இதில் பலத்த காயம் அடைந்த நிலையில், தீயில் கருகி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளவேடு காவல் நிலைய ஆய்வாளா் ஷோபாதேவி மற்றும் போலீஸாா், சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT