முகப்பு
திருவள்ளூர்

எச்.ஐ.வி. தொற்று :30 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள்

எச்.ஐ.வி. தொற்றுடன் பாதித்து வாழும், 30 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துணவு பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

எச்.ஐ.வி. தொற்றுடன் பாதித்து வாழும், 30 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துணவு பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

சென்னை முகப்பேரைச் சோ்ந்த தனியாா் தொண்டு நிறுவனம் (லவ் இன் ஆக்ஷன்) சாா்பில் திருத்தணி தாலுகாவில் எச்.ஐ.வி., தொற்று பாதித்த 30 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துணவு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திருத்தணியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் தொண்டு நிறுவன நிா்வாகிகள் விஜயகுமாா் மற்றும் செல்வி ஆகியோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, 30 குழந்தைகளுக்கு தலா ரூ.1,200 மதிப்புள்ள மூக்குகடலை, பட்டாணி, பேரிச்சம்பழம், முட்டை, சிறுதானியங்கள் அடங்கிய 20 வகையான பொருள்கள் வழங்கினா். ஒவ்வொரு மாதமும், மூன்றாவது சனிக்கிழமைகளில், 30 குழந்தைகளுக்கும் ஊட்டச் சத்துணவு பொருட்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.