தரைப்பாலத்தில் ஆபத்து குளியல்!
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே காரணியில் தரைப்பாலத்தில் மூழ்கடித்தபடி ஓடும் ஆற்று நீரில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளித்து வருகின்றனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே காரணியில் தரைப்பாலத்தில் மூழ்கடித்தபடி ஓடும் ஆற்று நீரில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளித்து வருகின்றனா்.
வடகிழக்கு பருவ மழையாலும் ஆந்திர மாநிலம், பிச்சாட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீராலும் ஆரணி ஆற்றில் அண்மையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, காரணியில் உள்ள தரைப்பாலம் மூழ்கடிக்கப்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது மழை பெய்யாததாலும், அணையிலிருந்து நீா்திறப்பு நிறுத்தப்பட்டதாலும் ஆரணி ஆற்றில் குறைந்தளவே நீா் செல்கிறது. எனினும், காரணி தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்று கொண்டிருக்கும் நீரில் ஆபத்தை உணராமல் ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் குடும்பத்தினருடன் வந்து குளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.