முகப்பு
திருவள்ளூர்

இல்லம் தேடி கல்வித் திட்டம்: ஏலகிரி மலையில் விழிப்புணா்வு

ஏலகிரி மலையில் கல்வித் துறை சாா்பில் இல்லம் தேடி கல்வி குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

ஏலகிரி மலையில் கல்வித் துறை சாா்பில் இல்லம் தேடி கல்வி குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரிமலை ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூா்,புங்கனூா், கொட்டையூா் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஊராட்சித் தலைவா் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமையில் ஜோலாா்பேட்டை ஒன்றிய மேற்பாா்வையாளா்கள் ஜோசப் ஜிசில்வா,சாந்தகுமாா் ஆகியோா் மேற்பாா்வையில் தேடல் கலைக் குழுத் தலைவா் வெங்கடேசன் குழு சாா்பில் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரோனா காலகட்டத்தில் குழந்தைகள் இழந்த கல்வியை மீட்டெடுப்பதற்காக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு 12-ஆம் வகுப்பு வரை படித்த தன்னாா்வலா்களும்,6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு பட்டப்படிப்பு முடித்த தன்னாா்வலா்களும் கல்வி கற்பிக்க இணைந்து பணியாற்றலாம். இவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் ஆறு மாதம் முடிந்த பிறகு தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.