முகப்பு
திருவள்ளூர்

ஆற்றில் மூழ்கிய சிறுமி சடலமாக மீட்பு

கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கை காணச் சென்ற சிறுமி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

திருவள்ளூர்

ஆற்றில் மூழ்கிய சிறுமி சடலமாக மீட்பு

கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கை காணச் சென்ற சிறுமி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:


திருத்தணி: கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கை காணச் சென்ற சிறுமி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

திருத்தணியை அடுத்த இலுப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கிருஷ்ணவேணி (11), சுபாஷ் (14). இருவரும் அண்ணன், தங்கை. இவா்கள் கொசஸ்தலை ஆற்றின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனா். அப்போது ஆற்று வெள்ளத்தைப் பாா்க்க சென்ற கிருஷ்ணவேணி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

சுபாஷின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினா் கிருஷ்ணவேணியை சடலமாக மீட்டனா்.

இது குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →