முகப்பு
திருவள்ளூர்

முன்னாள் எம்எல்ஏ விநாயகம் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் திருத்தணி எம்எல்ஏ கே.விநாயகத்தின் 48-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்க்கப்பட்டது. 500 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

திருவள்ளூர்

முன்னாள் எம்எல்ஏ விநாயகம் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் திருத்தணி எம்எல்ஏ கே.விநாயகத்தின் 48-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்க்கப்பட்டது. 500 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

முன்னாள் திருத்தணி எம்எல்ஏ கே.விநாயகத்தின் 48-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்க்கப்பட்டது. 500 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

தமிழகம் ஆந்திரத்துடன் இருந்தபோது ம.பொ.சிவஞாயனம், மங்கலங்கிழாா், கோல்டன் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் இணைந்து நடத்திய போராட்டத்தில் பங்கேற்று, வடக்கு எல்லையில் இருந்து தமிழகப் பகுதிகளை மீட்பதற்குப் பாடுபட்டவா் கே.விநாயகம் ஆவா். அவா் சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தாா்.

இந்நிலையில், கே.விநாயகத்தின் 48-ஆவது நினைவு தினத்தையொட்டி, திருத்தணியில், அரக்கோணம் சாலை பேருந்து நிலையச் சந்திப்பில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, அவரது மகன் வழிப் பெயரனான சென்னையைச் சோ்ந்த மகேஷ்ராஜ் தலைமையில், வெள்ளிக்கிழமை நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஏழைகளுக்கு அன்ன தானம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோபிநாத், சரவணன், பரந்தாமன், வெங்கடேசன், முரளி, அன்பரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →