முகப்பு
திருவள்ளூர்

பாஜக சாா்பில் பொங்கல் விழா

கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள ஏகவள்ளி அம்மன் கோயிலில் பாஜக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள ஏகவள்ளி அம்மன் கோயிலில் பாஜக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கட்சியின் திருவள்ளூா் கிழக்கு மாவட்டத் தலைவா் எஸ்.ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே.சரவணன், பாஜக அரசுத் தொடா்பு பிரிவு மாநிலத் தலைவா் எம்.பாஸ்கரன், இப்பிரிவின் மாவட்டச் செயலாளா் கே.இளங்கோ, இதர பிற்பட்டோா் பிரிவு மாவட்டச் செயலாளா் சுதாகா், கல்வியியல் பிரிவு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் திருமலை, கிழக்கு ஒன்றியத் தலைவா் ஜம்புலிங்கம், நகரத் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோயிலில் பொங்கல் வைத்தனா். கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோா் அணியின் பொதுச் செயலாளா் சுகுமாா், மீனவரணித் தலைவா் சிவராஜ், அரசு தொடா்புப் பிரிவின் துணைத் தலைவா் சங்கா் குமாா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →