சிலிண்டர் தட்டுப்பாடு: எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் மக்களவை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் பகல் 12 மணி வரையில் மக்களவை ஒத்திவைப்பு
பல்வேறு பிரச்னைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா காந்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தையடுத்து, நண்பகல் 12 மணிவரையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மத்திய கிழக்கு போரால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், உணவகங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் போன்றவை மூடப்படும் அபாயம் நேரிட்டுள்ளது.
நாட்டில் அடுத்த இரு வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தாலும், எரிவாயு இருப்பு குறைவாகவே இருப்பதாகத் தகவல்கள் தெரிக்கின்றன.
இதனால் 5 நட்சத்திர விடுதிகள் முதல் சாலையோர டீக்கடை, தட்டுக்கடைகள் வரை அனைத்துக்கும் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்றே பல்வேறு நகரங்களில் உணவகங்களை மூடத் தொடங்கிவிட்டனர். அதிக அளவில் தனியர்கள் வசிக்கும் பெங்களூரில் ஏற்கெனவே ஹோட்டல்கள் மூடப்பட்டுவிட்டன.
Parliament Budget Session: Lok Sabha adjourned till 12pm amid uproar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.