முகப்பு
இந்தியா

தெலங்கானா ஆளுநராக பிரதாப் சுக்லா பதவியேற்பு!

தெலங்கானாவில் புதிய ஆளுநர் பதவியேற்பு பற்றி..

Updated On : 11 மார்ச், 2026 at 6:44 AM
ஷிவ் பிரதாப் சுக்லா
பகிர்:

தெலங்கானா ஆளுநராக ஷிவ் பிரதாப் சுக்லா புதன்கிழமை பதவியேற்றார்.

தமிழகம், தெலங்கானா உள்பட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், ஹிமாசலப் பிரதேச ஆளுநராகப் பணியாற்றிய ஷிப் பிரதாப் சுக்லா தெலங்கானா ஆளுநராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

அதன்படி, ஆளுநர் மாளிகையில் தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங், ஷிப் பிரதாப் சுக்லாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஹிமாசலப் பிரதேச ஆளுநராகப் பணியாற்றிய ஷிப் பிரதாப் சுக்லா, செவ்வாயன்று மாநிலத்திற்கு வருகைதந்தபோது ரேவந்த் ரெட்டி அவருக்கு அன்பான வரவேற்பு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Shiv Pratap Shukla was sworn in as Telangana Governor on Wednesday.

முழு கட்டுரையைப் படிக்க →