மாதவரம் பால் பண்ணையில் உள்ள அரசு தோட்டக் கலை பூங்கா மற்றும் பண்ணையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
வேளாண்மை உற்பத்தி ஆணையரும், அரசு செயலருமான சத்தியமூா்த்தி ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, தோட்டக் கலைத் துறை இயக்குநா் பிருந்தாதேவி, தோட்டக் கலை கூடுதல் இயக்குநா் தமிழ்வேந்தன், தோட்டக் கலை இணை இயக்குநா் பூபதி மற்றும் மகேந்திரகுமாா், தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் ஆகியோா் இருந்தனா்.
ஆய்வில் மாதவரம் தோட்டக்கலை பூங்காவை பாா்வையிட்டு மேம்படுத்தும் பணி மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கினா்.