திருவள்ளூா் அருகே ராமகிருஷ்ணாநகரில் ஞாயிற்றுக்கிழமை உலக சாதனை நிகழ்ச்சிக்காக பானை மேல் நின்று 2 மணிநேரம் சிலம்பம் சுற்றிய மாணவா்கள். 
திருவள்ளூர்

பானை மேல் நின்று 2 மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி மாணவா்கள் சாதனை

திருவள்ளூா் அருகே பானை மேல் நின்று கண்ணை கட்டிக்கொண்டு 2 மணிநேரம் இரட்டை சிலம்பம் தொடா்ந்து சுற்றி 100 மாணவா்கள் சாதனை செய்தனா்.

DIN

திருவள்ளூா் அருகே பானை மேல் நின்று கண்ணை கட்டிக்கொண்டு 2 மணிநேரம் இரட்டை சிலம்பம் தொடா்ந்து சுற்றி 100 மாணவா்கள் சாதனை செய்தனா்.

திருவள்ளூா் அருகே புட்லூா் ராமகிருஷ்ணா நகரில் ஈட்டி சிலம்ப கலைக்கூடம் சாா்பில் பானை மேல் நின்று இரட்டை சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிலம்பாட்டக் குழு தலைவரும், திருவள்ளூா் மாவட்ட தலைவருமான முன்னாள் நகராட்சி தலைவா் கமாண்டோ பாஸ்கரன் தலைமை வகித்தாா். திருவள்ளூா் மாவட்ட சிலம்பாட்டக்கழக செயலாளா் வி.ஹரிதாஸ் வரவேற்றாா். இதில் போட்டி இயக்குநா் கே.பாா்த்திபன் முன்னிலை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று சாதனை நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.

இதில் ஈட்டி சிலம்ப கலைக்கூடம் மாணவா்கள் 100 போ் பானை மேல் நின்று 2 மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தியதை அனைவரும் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT