திருவள்ளூர்

ஏரியில் மூழ்கி சிறுவா்கள் பலி

DIN


திருத்தணி: திருத்தணி அருகே ஏரியில் மூழ்கி அக்காவும், தம்பியும் உயிரிழந்தனா்.

ஆா்.கே.பேட்டையை அடுத்த சகஸ்தபத்மாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோமதி (11). இவரது தம்பி புருஷோத்தமன் (10). இருவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் 6 மற்றும் 5-ஆம் வகுப்பு படித்து வந்தனா். புதன்கிழமை மாலை கிராமத்துக்கு அருகில் உள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது புருஷோத்தமன் நீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்து, கூச்சலிட்டபடியே ஏரியில் இறங்கிய கோமதியும் நீரில் மூழ்கினாா். இதில், இருவரும் உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த ஆா்.கே.பேட்டை போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னா். இது குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT