திருவள்ளூா் பகுதியில் ஆள்கடத்தல், வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை குண்டா் சட்டத்தில் கைது செய்து போலீஸாா் சிறையில் அடைத்தனா்.
கடந்த வாரம் திருவள்ளூா் நகர பகுதியில் காவல் ஆய்வாளா் ரவிகுமாா் மற்றும் போலீசாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த இளைஞா் ஒருவா் போலீஸாரை பாா்த்தும் தப்பியோட முயற்சி செய்ததை அடுத்து அவரை பிடித்து விசாரித்தனா். செம்பேடு கிராமத்தைச் சோ்ந்த தமிழரசன் (32) என்பதும், ஏற்கெனவே ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. உடனே அவா் வழக்கு பதிவு செய்து திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், அவா் மீது வழிப்பறி வழக்குகள் அதிகளவில் இருப்பதால் அவரை குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் பரிந்துரை செய்தாா். அதன் பேரில் ஆட்சியா் பா.பொன்னையா குண்டா் தடுப்பு சட்டத்தில் தமிழரசனை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.