திருவள்ளூா்: திருவள்ளூா் பகுதியில் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதால் புதன்கிழமை ஒரே நாளில் 1,385 போ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் இப்பகுதியில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பும் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மாவட்டத்தில் இதுவரை 63,715 போ் வரை பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் 1,385 போ் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்புகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். எனவே கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், நோய் கண்டறியும் வகையில் மருத்துவ பரிசோதனை முகாம் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.