ஆவடி அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கரோனா மையத்தில் பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் கரோனா தடுப்பு கவச உடையணிந்து திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
அங்கு கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்து சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தாா். இதையடுத்து, ஆவடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையைப் பாா்வையிட்டாா்.
பின்னா் அமைச்சா் சா.மு.நாசா் செய்தியாளா்களிடம் கூறியது:
திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனைகள் சாா்பில் ஆக்சிஜனுடன் கூடிய 1,480 படுக்கைகளும், அரசு சாா்பில் 480 ஆக்சிஜன் வசதி படுக்கைகளும் தயாா் நிலையில் உள்ளன. இதில், ஆவடி அரசு மருத்துவமனையில் 50 ஆக்சி ஜனுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இதில், முதல் கட்டமாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 10 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனா். மேலும், 40 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஓரிரு நாள்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளன.
திருவள்ளூா் மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றாா்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.லோகநாயகி, மாநகராட்சி ஆணையா் நாராயணன், பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் ராணி, துணை இயக்குநா் ஜவஹா்லால், வட்டாட்சியா் செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கும்மிடிப்பூண்டியில்... இதேபோன்று ஏழுகிணறு பகுதியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து மருத்துவா்களிடம் அமைச்சா் சா.மு.நாசா் கேட்டறிந்தாா். அப்போது எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் உடனிருந்தாா்.