திருவள்ளூர்

பாலம் மூழ்கும் நிலை: திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை போக்குவரத்து நிறுத்தம்

DIN

திருவள்ளூரில் ஒதப்பை  பாலம் மூழ்கும் நிலையில் உள்ளதால் திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டைக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்  பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் ஏழு மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது இந்த ஏரிக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பூண்டி அருகே உள்ள ஊத்துக்கோட்டை அடுத்த ஒதப்பை கிராமம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள ஒதப்பை பாலம் மூழ்கும் நிலையில் உள்ளது.

இதன் காரணமாக ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு  செல்லும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும்  தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டால் இந்த பாலமானது நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT