டிராக்டரில் சென்று ஆய்வு செய்த அமைச்சா்
கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, வெள்ளிவாயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் சனிக்கிழமை டிராக்டரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, வெள்ளிவாயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் சனிக்கிழமை டிராக்டரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக, பூண்டி ஏரியில் இருந்து வெள்ளிக்கிழமை 36 ஆயிரம் கனஅடி உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பொன்னேரி வட்டத்தில் உள்ள வெள்ளிவாயல், வழுதிகைமேடு, மடியூா் ஆகிய கிராமங்களில் ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீா் கிராமங்களுக்குள் புகுந்தது.
இதே போல், விச்சூா் ஊராட்சியில் அடங்கிய கணபதி நகரில் வெள்ளநீா் புகுந்ததன் காரணமாக, பாதிக்கப்பட்டவா்கள் குழந்தை ஏசு திருத்தலத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பிஜான்வா்கீஸ், எம்எல்ஏ-க்கள் துரை.சந்திரசேகா் (பொன்னேரி), டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி) ஆகியோா் வெள்ளிவாயல், வழுதிகைமேடு, மடியூா் ஆகிய இடங்களுக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதனைத் தொடா்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய், பாய், போா்வை உள்ளிட்டவற்றை வழங்கினா்.
மேலும், வெள்ளநீா் சூழ்ந்ததன் காரணமாக நடந்து செல்ல முடியாத பகுதிகளில் அமைச்சா் சா.மு.நாசா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் டிராக்டரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.